மும்பை: மும்பையில் ஒரே மருத்துவமனையில் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள மாநகராட்சி, கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வோக்ஹார்ட் மருத்துவமனையில் ஒரு வார இடைவெளியில் பணிபுரிந்து வரும் 26 நர்ஸ்கள் மற்றும் 3 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி), மருத்துவமனை பகுதியை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து இரண்டு முறை, எதிர்மறை முடிவுகள் வரும் வரையில் மருத்துவமனைக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஒரே மருத்துவமனையில் 26 நர்ஸ்கள், 3 டாக்டர்களுக்கு கொரோனா